Thursday, August 27, 2009

நம் பதிவை எந்த முறையிலும் காப்பி செய்வதை தடுக்க

நான் போன பதிவில், வெளியிட்டிருந்த கோடிங்கில் நிறைய ஓட்டைகள் இருந்ததை நண்பர்கள் சுட்டி காட்டினர். அதனால், இந்த கோடை புகுத்தினால், எம்முறையிலும் (மவுஸ் மற்றும் கீ போர்டு) நம் பதிவை யாராலும் காப்பி செய்ய இயலாது.

Dashboard - Layout - Edit Html போய்,
<head>
என்று இருப்பதற்கு கீழ் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். இப்போ, ஸ்னாப் ஷாட் எடுப்பதை தவிர்த்து வேறு எந்த முறையிலும் உங்கள் பதிவை திருட முடியாது.

<script language='JavaScript1.2'>function disableselect(e){return false}function reEnable(){return true}document.onselectstart=new Function ("return false")if (window.sidebar){document.onmousedown=disableselectdocument.onclick=reEnable}</script>


இத்துடன், http://sumazla.blogspot.com/2009/08/blog-post_26.html ல் இருக்கும் கோடிங்கையும் இணைத்தால், "Copy Right" என்ற எச்சரிக்கையை வெளியிடும்.


-சுமஜ்லா.
.
.

17 comments:

  1. Anybody can disable javascript in browser. and copy contents.

    thirudanaai paarththu thirunthaa vittaal thiruttai olikka mudiyaathu

    ReplyDelete
  2. i know this already, read my last comment in previous post.

    ReplyDelete
  3. வழி இருக்குங்கோ

    மறந்துட்டேன் - ஞாபகபடுத்தி சொல்றேன்.

    -----------------

    இது தொழில் நுட்பம் தெரிந்து கொள்ள மட்டுமே

    என் பதிவு(?)களையெல்லாம் யாரும் அடிக்கமாட்டாங்க

    ReplyDelete
  4. நல்ல பதிவு நன்றி சுஹைனா

    ReplyDelete
  5. சில பேரு தான் மட்டும் மற்ற சைட் களில் இருந்து காபி அடித்து விட்டு தன் சைட்டில் காபி ரைட் போட்டுபாங்க.

    யார் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

    ReplyDelete
  6. //யார் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.//

    யார் மேல் இவ்வளவு கோபம்?

    ReplyDelete
  7. எனக்கு புரியல...

    இணையத்தில் எழுதிவைத்துவிட்டு, மற்றவர்கள் காப்பி செய்ய கூடாது என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்?

    மற்றவர்கள் காப்பி செய்ய கூடாது என்று எண்ணும் நாம் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்?

    ReplyDelete
  8. //இணையத்தில் எழுதிவைத்துவிட்டு, மற்றவர்கள் காப்பி செய்ய கூடாது என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்?

    மற்றவர்கள் காப்பி செய்ய கூடாது என்று எண்ணும் நாம் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்?//

    அதானே! ஆனாலும் கவிதை போன்றவையெல்லாம் ஒருவரின் உழைப்பில் உருவாவதல்லவா?

    ReplyDelete
  9. //கவிதை போன்றவையெல்லாம் ஒருவரின் உழைப்பில் உருவாவதல்லவா?//

    அப்படின்னா, நோட்ல மட்டும் எழுதி வச்சு அழகு பார்க்கணும். :)

    ReplyDelete
  10. ஹலோ! எல்லா புத்தகங்களிலும் காப்பி ரைட் என்று விதிமுறை போட்டிருப்பதை பார்த்ததில்லையா? பின்ன நோட்ல மட்டும் எழுதி வைத்து அழகு பார்க்காம ஏன் புத்தகமா வெளியிடறாங்க?

    கார் வாங்கறோம்; ஆக்ஸிடெண்ட் ஆக கூடாதுன்னு நினைக்கிறோம். அதுக்காக வீட்லயே வெச்சுக்கன்னு சொன்னா எப்படிங்க?

    ReplyDelete
  11. ம்.. இது பாய்ண்ட், புத்தகங்கள் லாப நோக்கத்தோடு எழுதப்படுபவை. உங்கள் இணையமும் அப்படி என்றால் பே ஸைட் ஆக்கிவிடுங்கள்.

    கார் உதாரணம் பொருந்தாது. ரிஜக்ட் செய்கிறேன். :)

    ReplyDelete
  12. என் இடுகையை அடுத்த நொடியே காப்பி செய்தி இட்ட தளம் எனக்கு தெரியும். நல்லது தானே. நாலு பேருக்கு நம் கருத்து போகுமில்லையா? திரட்டிகளில் இணைப்பது அதற்கு தானே?

    ReplyDelete
  13. திரட்டிகளில் படிப்பது பலரும் படித்து ரசிக்க வேண்டும் அல்லது பயனடைய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர காப்பி அடிக்க அல்ல. எழுத்தாளருக்கு தான் எழுத்து சொந்தம். அதனால் தான், அதை புத்தகமாக தொகுத்தால் கூட ராயல்டி தருகிறார்கள்.

    என் ப்ளாகில் நம் குரல் முதலான பல இடுகைகளை, ஒரு சைட் அப்படியே அச்சு அசலாக காப்பி செய்து, கீழே என் முகவரி தந்திருந்தார்கள். பலரை சென்றடைய நம் இடுகைக்கான லின்க் போதுமே!

    பே சைட் ஆக்குவதும் ஆக்காததும், அவரவர் இஷ்டம். அதோடு, தேடி வந்து படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம். எல்லா புத்தகமும் லாப நோக்கம் என்று யார் சொன்னார்கள்.

    எழுத்தில் பல வகை இருக்கிறது...கிரியேட்டிவ் லிட்ரேச்சர் மட்டும் தான் அவர் உழைப்பில் உருவானது.

    வகுப்பறையிலேயே யாராவது காப்பி அடித்தால், அதை போட்டு கொடுக்கும் முதல் ஆள் நான் :-) காப்பி பிடிக்காததால் தான் இதுவரை நான் காப்பியே வாழ்க்கையில் குடித்ததில்லை:-))))))))))

    நான் வேணா ஒரு இடுகை எழுதி, உங்க பதிவுகளை இலவசமா காப்பி செய்ய சொல்லி விடுகிறேன். உங்க பரந்த மனசு :) யாருக்குங்க வரும்?

    ஆனா ஒன்னு, காப்பி செய்தால், அவரின் அலெக்ஸா ரேங்கிங் குறையும்.

    ReplyDelete
  14. அக்கா... தாராளமா நீங்க காப்பி ரைட் வச்சுகுங்க, ரைட் ப்ரொட்டக்ட் வச்சுக்குங்க...
    நான் வரல இந்த விவாதத்துக்கு, நீங்க தான் வெற்றி. :)

    இப்ப சந்தோசமா?

    ReplyDelete
  15. தெரியுமே, தம்பி பீர், கொஞ்சம் வாதாடி, நான் என்ன தான் சொல்றேனு பார்க்கிறார் என்று.......:)

    அதான், சைடில் This work is licensed under a Creative Commons Attribution 2.5 India License.
    என்று போட்டிருக்கேனே!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. நான் இதை செய்யலாம் என்று இருந்தேன்..

    ஆனால் பின்னூட்டத்திற்கு காபி செய்வார்கள் என்பதால் இதை செய்யாமல் விட்டு விட்டேன் ..

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.