நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் நண்பரே! சுமஜ்லாவாகிய நான் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, November 23, 2009

குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே...

கண்மணியே கண்மணியே
உன்னைத்தானே கொஞ்சிடுவோம்
விளையாட ஓடி வா நீ!
(கண்மணியே)

மஞ்ச பூமேனியே அன்பு லாஃபுகண்ணே
உன்னை அன்போடு அணைத்து கொள்வோம்!
(கண்மணியே)

இது இசையல்ல வரும் பாட்டல்ல,
இது என்றென்றும் உன்வாழ்வில் இருக்கட்டும்!
கருவிழியாலே உன் மொழியாலே
சில நேரங்கள் சட்டென்று மகிழ்வூட்டும்!

பெண்ணே... கண்ணே...
பூமேனி தன்னோடு தாங்கி வரும் பெண்ணே
பொன்மாலை பூக்கூட உன்னை வாழ்த்தும் கண்ணே
உன் குறும்பின் அழகில் எல்லைகளேது
எந்நாளும் சிரிப்புண்டு!
(கண்மணியே)

இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு
பிஞ்சுக்கை நெஞ்சோடு தீண்டிட வந்தவள் யாரு
உனைக் கொஞ்சி கொஞ்சி உன்னழகை வியக்கிறேன்
இன்பங்கள் ஒரு கோடி தந்திட்ட கண்மணி யாரு?

பெண்ணே... கண்ணே...
பூமாரி உன்மீது என்றும் பொழிய வேண்டும்
ஊரார்கள் உனைவாழ்த்தும் அழகை ரசிக்க வேண்டும்!
அட வசந்தம் வீசிட வேண்டுமே
நல் தென்றல் காற்றோடு!
(கண்மணியே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்
(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு

பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

Friday, November 20, 2009

என்ன தான் நடக்குது காலேஜ்ல???

காலேஜ் அப்டேட்ஸ் எல்லாம் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது.

எங்க க்ளாஸில் ரெகுலராக வருபவர்கள் மொத்தம் 70 பேர். நான் முதல் பெஞ்ச்!

காலேஜில் கேண்டீன் கிடையாது. கண்டிப்பாக லன்ச் கொண்டு போக வேண்டும். எதாவது ஒரு நாள் என்றால், பணம் கொடுத்து ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

லேடீஸ் காலேஜ் என்றாலும், லெக்சரர்ஸ் ஜென்ஸும் இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் சின்ன பசங்க. மேடமும் கூட நிறைய பேர் யூத் தான்.

காலையில், வீட்டில் இருந்து 8.45க்கு கிளம்பினால், 9.25க்கு காலேஜ் போய் சேர்வேன். 17 கி.மீ. 9.45க்கு பெல்!

லஞ்ச் டைம் 1.10 முதல் 1.50 வரை! மாலை 4.50க்கு காலேஜ் முடியும். நான் ஸ்பெஷல் பர்மிஷனில் 3.30 மணிக்கே கிளம்பி விடுவேன்.

ஒரு பத்து பேர் மட்டும் என்னுடைய வயதுக்காரர்கள். மீதி எல்லாரும் 21-25 வயதுக்குட்பட்ட ஜூனியர்ஸ். சோ எல்லாரும் என்னை அக்கா என்று தான் கூப்பிடுவார்கள்.

லெக்சரர்ஸ் கூட, என்னை ‘மேடம்’, ‘மேடம்’ என்று கூப்பிட்டு வந்தார்கள். நான் அப்படி கூப்பிட வேண்டாம், ‘சுஹைனா’ என்றே கூப்பிடுங்கள் என்று சொன்ன பிறகு மாற்றிக் கொண்டார்கள்.

நிறைய அசைன்மெண்ட் தருகிறார்கள். ஏதாவது சொன்னால், இண்டர்னல் மார்க்ஸ் என்று சொல்லி பயம் காட்டுவார்கள். நான் எல்லாம் முதல் ஆளாக முடித்து விடுவதால் பிரச்சினை இல்லை.

அடிக்கடி டெஸ்ட் வேற! இறைவன் கிருபையால், இது வரை வைத்த எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண். இதனால், கொஞ்சம் போட்டியும் பொறாமையும் உருவானதைத் தான் தவிர்க்க முடியவில்லை...இவள் நம்மை விட அதிகம் தெரிந்திருக்கிறாள் என்று லெக்சரர்களே சில சமயம் ஃபீல் பண்ணுவது தான் கஷ்டமாக இருக்கிறது. அதனால், இப்போதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.

பக்ரீத்தை முன்னிட்டு போன செவ்வாய் கிழமை எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் பிரியாணி செய்து, காலேஜ் கொண்டு சென்று, மதிய விருந்து கொடுத்தேன்.

இதுவரை 5 ரெக்கார்டுகள் முடித்திருக்கிறேன். மொத்தம் 20 ரெக்கார்டுகள். அதெல்லாம் டீச்சிங் ப்ராக்டிஸ் போது தான் முடிக்கணும். அதாவது, 40 நாட்கள் ஏதாவது ஒரு கவர்ன்மெண்ட் பள்ளியில் நம்மை ப்ராக்டிஸ் செய்ய அனுப்புவார்கள். அப்போது, நிறைய சார்ட், மாடல் எல்லாம் செய்யணும். டெஸ்ட்டுக்கு படிக்க வேண்டியது இல்லை என்றாலும், இந்த வேலை நிறைய இருக்கும். அதோடு, நாம் வகுப்பில் எடுக்கும் பாடத்துக்கு ஏற்ப லெசன் ப்ளான் ரெக்கார்டு எழுதணும்.

எல்லாரும் எனக்கு ஃபிரண்ட்ஸ் தான். ஆனால், டியர் ஃபிரண்ட் என்று யாரும் இது வரை இல்லை. ஆப்ஷன் க்ளாஸ் என்று ஒரு பீரியட் வரும். அதாவது, மேத்ஸ், சைன்ஸ், இங்கிலீஷ் இப்படி என்ன மேஜரோ, அதற்கேற்ப பிரிந்து க்ளாஸ் அட்டெண்ட் செய்வோம். என்னுடையது இங்கிலீஷ் மேஜர். அதற்கு 12 பேர் இருப்பார்கள்.

ஒரே டெஸ்ட், அசைன்மெண்ட் என்று போர் அடித்தது. அதனால், சில்ட்ரன்ஸ் டே வை முன்னிட்டு ஒரு கல்சுரல் ப்ரோக்ராம் வைக்கலாம் என்று கேட்டோம். அனுமதி கிடைக்க வில்லை. எல்லாருக்கும் ஏமாற்றம். சரி, அவரவர் திறமையை தனித்தனியாக வெளிப்படுத்து ஒரு சின்ன ப்ரோக்ராம் செய்யலாம் என்று மேனேஜ்மெண்ட் சார், அவர் வகுப்பில் அனுமதி தர, அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம்.

நான் காலேஜில் நடக்கும் விஷயங்களை வைத்து, ஒரு சின்ன ஸ்கிட் ரெடி செய்தேன். அதில் நான் தான் புலிகேசி. மேலே ஒரு ஜிகுஜிகு ஷால் போர்த்தி, தலையில் ஒரு தலைப்பாகை வைத்து ஐந்து நிமிடத்தில் புலிகேசி ரெடியாகி விட்டார். சொல்ல சொல்ல கேட்காமல், மீசை வேறு வரைந்து விட்டார்கள்...அந்த ஸ்கிட் கீழே தருகிறேன்.

/////இம்சை அரசன் 23-ம் புலிகேசி 30-ம் புலிகேசி ஆன கதை

அரசர் 23ம் புலிகேசி அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார். சேவகன் கட்டியம் கூறுகிறான்.

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்

புலிகேசி: ,அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடியும் சொல் பார்ப்போம்

சேவகன்: (நடுங்கியபடியே) மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தவறாக சொன்னதற்கு இண்டர்னல் மார்க்ஸ் குறைப்பேன் என்றீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை அசைன்மெண்ட் எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா...

புலிகேசி:அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய்? இன்னொரு முறை சொல்!

சேவகன்: ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்

புலிகேசி: நிறுத்து இனி 23 புலிகேசி என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா? அப்படியே தினமும் 30 முறை அசைன்மெண்ட் எழுதிவா தெரிகிறதா?

சேவகன்:சரி மன்னா.. (மன்னர் சென்று விடுகிறார். சேவகன் தனக்குள்) ஒரு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடையாது. இந்த அரசவையில் எப்போது நம்மை வேலையை விட்டு தூக்குவார்கள் என்றும் புரியாது. ஆனால்.....

அமைச்சர்: என்ன உமக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறீர் சேவகரே?

சேவகன்: பிறகு என்ன அமைச்சரே! ஒரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமில்லை! லைஃப் ரொம்ப போரடிக்குது! எப்போது பார்த்தாலும் மன்னர் அசைன்மெண்ட் எழுத சொல்கிறார். மன்னர் இடும் அராஜக சட்டங்களுக்கு பணிந்து பணிந்து....அதுவும் 30ம் புலிகேசி என்று இனி 30 முறை எழுதி வர வேண்டுமாம்....விரல்கள் எல்லாம் வீங்கி விட்டன. விழிகள் எல்லாம் சோர்ந்து விட்டன.

அமைச்சர்: என்னது 30ம் புலிகேசியா? 23ம் புலிகேசி தானே?! இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால் தான் 23ம் புலிகேசி என்று அழைக்கிறார்கள்.... எப்போது இவர் 30ம் புலிகேசி ஆனார்?

புலிகேசி: அமைச்சரே!

அமைச்சர்: மன்னா...என்னா...
தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்?

புலிகேசி: நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா? நான் மன்னனா நீயா?

அமைச்சர்: சரி சரி கோபப் படாதீர்கள்

(இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.)

அமைச்சர்: திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா? இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் டூயட் பாட வேண்டிய நேரமாயிற்றே???? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?

புலிகேசி: அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்

நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்?

அமைச்சர்:தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா

புலிகேசி:உடனே 6 பேரை பதவி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்...

அமைச்சர்: மன்னா ஏன்…

புலிகேசி: ஒரு துறைக்கு ஒரு அமைச்சர் போதும்...

அமைச்சர்: மன்னா....நம் அரசாங்கத்தில் மொத்தம் 33 துறைகள்....அதோடு, திடீரென்று போகச்சொன்னால், எங்கே போவார்கள்????

புலிகேசி: சரி, அவர்கள் வேறு வேலை தேடிக் கொள்ள, 30 நாட்கள் அவகாசம் கொடுத்து விடு! எப்போதும் ஓரிரு துறைக்கு அமைச்சர்கள் இருக்கவே கூடாது...இதெல்லாம் நம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள்...

அமைச்சர்: மன்னா, அமைச்சர்கள் இல்லாவிட்டால், மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்....

புலிகேசி: கேள்வி கேட்காதே. அதிகமாக பேசினால் எனக்கு பிடிக்காது.... ஆனால்.... வரியை மட்டும் பாக்கியில்லாமல் வசூலித்து விடு!

அமைச்சர்: மன்னா...நாம் இதுவரை 50 பொற்காசுகள் வரி வசூலித்து வந்தோம்...அதையும் 30 பொற்காசுகள் என்று மாற்றி விடலாமா?

புலிகேசி: வேண்டாம்...வேண்டாம்...அதை 60 ஆக மாற்றி, இரு தவணைகளில் முப்பது முப்பதாக செலுத்த சொல்லுங்கள்...
அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்?

அமைச்சர்: சில 31 ,30,28 இப்படி

புலிகேசி: சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
அதோடு மாதத்துக்கு எத்துணை முறை அரசவை உறுப்பினர்களின் அறிவை சோதித்தோம்?

அமைச்சர்: வாரம் இரு முறை பரிச்சை வைத்துக் கொண்டிருந்தோம் மன்னா...

புலிகேசி: இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.இனி மாதம் 30 நாளும் பரிச்சை வைக்க ஏற்பாடு செய்! அதோடு இண்டர்னர் மார்க்ஸ் 20ஐ முப்பது ஆக மாற்றி விடு!
(அங்கத்தினர் மயங்கி விழுகிறார்கள்)

அமைச்சர்: ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி? ,இன்னா நாற்பது,இனியவை நாற்பது …..

புலிகேசி: நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்?

அமைச்சர்:133 அதிகாரம் மன்னா

புலிகேசி:அதையும்…

அமைச்சர்:மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளது (30 ஐ அழுத்திச் சொல்ல)

புலிகேசி:சரி சரி இருந்து விட்டு போகட்டும்
(சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறது‘அரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்‘)

புலிகேசி: ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் முன்னால் வா மகனே (வருகிறார்)

அமைச்சரே இந்த பண்டிதனுக்கு 30 பொற்காசுகள் சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;

அமைச்சர்: 26 மன்னா

புலிகேசி: உடனடியாக இன்னும் நால்வருக்கு ஏற்பாடு செய்யும்.அப்புறம் நம் பற்களின் எண்ணிக்கை.....

அமைச்சர்: 32 மன்னா...ஆனால், தாங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடி வரும் போது, கல் தடுக்கி விழுந்து 2 பற்கள் உடைந்து விட்டன.

புலிகேசி: அப்படியா ரொம்பவும் நல்லது...இனி, அனைத்து குடிமக்களுக்கு 30 பற்கள் தான் இருக்க வேண்டும். அதிகமாக இருப்பதை தட்டி விட ஏற்பாடு செய்!

(அவையினர் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். ‘என்ன ரொம்பவும் அராஜகமாக இருக்கிறதே????’ ‘பல்லைக் காட்டாமல் பேசுங்கள்...தட்டி விட போகிறார்கள்....)

சேவகன்: என்ன எல்லாரும் கண்டிப்பாக பேசித்தான் ஆக வேண்டுமா? சற்று அமைதியாக இருங்கள்.

புலிகேசி: அப்புறம்....இந்த மீசைக்கார பாரதி எழுதிய ‘முப்பது கோடி முகமுடையாள்’ பாடலை நமது தேசிய கீதமாக்கி விடுங்கள்.

அமைச்சர்: சரி மன்னா....இப்போது தான் புரிகிறது, நீங்கள் 30ம் புலிகேசி ஆக எவ்வளவு சிரமப்பட்டு சிந்திக்கிறீர்கள் என்று!

புலிகேசி: ஹூம் இப்போது 30 மட்டும்தான்... இது மீண்டும் 50 ஆகக் கூட மாறும்.
(மன்னர் சென்று விடுகிறார்.)

அமைச்சர்: அய்யோ...அய்யோ.... இவர் இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால், தான் மக்கள் 23ம் புலிகேசி என்றார்கள்.... இனி இன்னமும் ஏழு சிம்மாசனங்களை தயாரிக்க சொல்ல வேண்டும்.

.- சுமஜ்லா.////

எல்லாம் செம்ம காமடி! அப்புறம் நான் ஓரிரு கவிதைகள் வாசித்து அப்ளாஸ் வாங்கினேன். எல்லாரும் அவரவர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

டெஸ்ட், அசைன்மெண்ட் என்னும் ஹீட் குறைந்து மனதுக்கு இதமாக இருந்தது! அடுத்த புதன் முதல் டீச்சிங் ப்ராக்டிஸ் என்கிறார்கள். சி.ஓ. ஆர்டர் தந்து விட்டால், போய் விடுவோம். இல்லாவிட்டால், இன்னமும் ஒரு பதினைந்து நாட்கள் ஆகும்! அப்படி போக வில்லை என்றால், யூனிட் டெஸ்ட் ஆரம்பித்து விடும்.

வகுப்புக்கு நான் தான் லீடராக இருந்தேன். பிறகு என்னால், முடியவில்லை என்று (ஓய்வு நேரத்தில் படிக்க முடிவதில்லை) வேறு ஆள் போட சொல்லி விட்டேன். எல்லாம் ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலர் மட்டும்(லெக்சரர் உட்பட) தம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, என் திறமையின் மேல் பொறாமை கொண்டு என்னை துச்சமாக மதிப்பதைத் தான் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை! உலகத்தை புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பு எனக்கு! அந்த மன உளைச்சல் காரணமாகவும், எம்.ஏ.எக்ஸாம்ஸுக்கு(டிசம்பரில் எக்ஸாம்) படிப்பதற்காகவும் தான் மூன்று நாட்கள் லீவு போட்டிருக்கிறேன்.

கடைசியாக, எங்கள் மேடம் சொன்னது, “சுஹைனா...உங்களுக்கு வகுப்பு தோழிகளை விட இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸ் தான் ரொம்ப பிடிக்கிறது...” இதை அவர் ஒரு குறையாத் தான் சொன்னார். ‘ஆமாம்...அதில் என்ன தவறிருக்கிறது? அது தன்னலம் பாராத நட்பு!’ என்றேன். சரி தானே?!

-சுமஜ்லா.

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

அரபு சீமையிலே... - 11

பிஞ்சு பருவத்திலே
பெற்றோரை இழந்து விட – தன்
நெஞ்சில் தாங்கி வளர்த்தார்,
பாட்டன் அப்துல் முத்தலிப்!

தாயற்ற பிள்ளையை
தான் வளர்த்து வந்தாலும் – தான்
நோயுற்ற காரணத்தால்
அபூதாலிபிடம் ஒப்படைத்தார்!

சிறப்பாய் தன் பேரரை
உவப்பாய் ஒப்படைக்க,
இறப்பென்னும் இயற்கை
இதமாகத் தழுவியது!

பெற்ற பிள்ளையினும் மேலாய்
பேணி வளர்த்தார்!
உற்ற துணையாம் பாத்திமாவும்
கணவர் வழியில் நடந்தார்!!

ஆயிற்று அகவை பன்னிரெண்டு!
பெரிய தந்தைக்கு துணையாய் நின்று,
வணிகம் புரிந்திட்டார் சிரியா சென்று!!

சென்றடைந்த நகரம் புஸ்ரா,
அங்கிருந்த திரித்துவர் பஹீரா,
பாதிரியாரும் சொன்னார்,
ஏதறியா இளவலுக்கு
எதிர்காலச் சிறப்புண்டு!
சூதரியா சிறுவரை நீர்,
சூதனமாய் அழைத்துச் செல்வீர்!
தூதரிவர் என்ற உண்மை,
தெள்ளியதாய் தெரிகிறது,
யூதர்களும் கண்டு கொண்டால்,
உயிருக்கு ஆபத்து!
ஆதரவாய் அழைத்துக் கொண்டு
இக்கணமே ஊர் செல்வீர்!!

சொன்ன மொழி கேட்டவுடன்,
சுருக்காக திரும்பி விட்டார்.
இன்னதென அளவிலாத
அபரிமித லாபம் பெற்றார்!!

ஏந்தல் நபி தன் வாலிபத்தில்,
பாந்தமாய் விளங்கினார், வாணிபத்தில்!!

பணமில்லாதிருப்பினும், நல்ல
குணமிருந்தது!
தனமில்லாதிருப்பினும், சிறந்த
மனமிருந்தது!!

பாடுகள் பார்த்தார் –
பெரிய தந்தையின்
ஆடுகள் மேய்த்தார்!
காடுகள் தன்னில்,
ஆடுகள் மேய - நபியோ
தேடுதல் செய்தார் – உண்மையை
நாடியே நின்றார்!!

வீண் விளையாட்டை
நாடவில்லை மனம் – எனினும்
வீர விளையாட்டில்
ஈடுபட்டார் தினம்!

நேர்மை கொண்டார் – மனதில்
ஓர்மை கொண்டார் – மதியில்,
கூர்மை கொண்டார்!!

அமானிதத்தில் அக்கறை
வாழ்வினிலே சத்தியம்
வாக்கினிலே வாய்மை
ஒழுக்கத்திலே தூய்மை!

நாளும் கொண்டார் – இறை
நாட்டம் கொண்டார் – உயர்
தேட்டம் கொண்டார்!!

கல்லாதவராயினும் – அவர்தன்
நேர்மைக்குப் பரிசாய்
அல்-அமீன் – ‘நேர்மையாளர்’
என்றழைக்கப்பட்டார்!

சொல்லெதுவோ செயலதுவாய்
வாழ்ந்து நின்றார்!
நல்லவிதமாய் அமானிதத்தை
பேணிக் காத்தார்!!

சத்தியம் அழிந்து
அக்கிரமம் தழைத்த,
அன்றைய மக்கா நகரினிலே…

பத்தரை மாற்றுப்
பசும் பொன்னாக,
எத்தகை தீதும்
இத்துணை சூதும்,
அண்டிட தன்னை
வழி தரவில்லை!
மண்டிய கெடுதலில்
மதி செல்லவில்லை!!

வாழ்க்கையிலே தூய்மை
வாக்கினிலே வாய்மை – என
வாழ்ந்து காட்டி வழியமைத்தார்,
வையம் போற்றும் எங்கள் நபி!!

(வளரும்)

பி.கு.:நபிகள்(ஸல்) அவர்கள் பெயர் வரும் இடங்களில் ஸலவாத் ஓதிக் கொள்ளுங்கள்.

-சுமஜ்லா.

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...

///"மதில்சுவர்கள் ஒரு காரணத்திற்காகவே இருக்கின்றன. நம்மை வெளியில் நிறுத்துவதற்காக அவை இல்லை. நாம் எவ்வளவு தீவிரமாக (எப்படியெல்லாம்) சிலவற்றை பெற விரும்புகின்றோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கவே அவை இருக்கின்றன. சில நேரங்களில், ஊடுருவ இயலாத சுவர்கள் சதைகளால் ஆனவை." ///

///"The Brick walls are there for a reason.... They are not to keep up us out. The brick walls are there to give us a chance to show how badly we want something"
The following line has to be added in middle of thier kavithai
" Sometimes the most impenetrable walls are made of flesh"///

தோழி தந்த மேற்கண்ட வாசகத்துக்காக எழுதிய கவிதை!

முதலில் ஒரு தமிழ் கவிதை, அப்புறம் ஆங்கில வார்த்தை விளக்கத்துக்கு ஒரு ஆங்கில கவிதை!

மதில் சுவரெல்லாம் தடைசுவரல்ல...

வேதனை வருவது தாண்டிடவே
சோதனை வருவது சாதனைக்கே!
பாதையில் குறுக்கிடும் தடைக்கல்லும்
மோதிட தூளாய் சிதறிடுமே!

மதில் சுவரென்பது மறைப்பல்ல,
பதில் தெரியாத புதிரல்ல,
அதில் தாண்டுவதென்பது நிர்பந்தம்,
இதில் யாருக்கு என்ன சந்தேகம்?!

நடக்காதிருக்கும் வரை தானே,
அட, ஆசை என்றது பெயர் கொள்ளும்;
தடங்கல் தாண்டும் உத்வேகம்,
உடன் ஜெயத்தை நமக்கு தந்திடுமே!

தேவையின் தன்மையை உணர்த்திடவே
சேவை செய்யும் மதில் சுவர்கள்,
பாவை யென் தோழி தயவினிலே
யாவையும் தெளிவாய் சொல்லிடுதே!

சுவருக்கு பின்னே சுகந்தங்களே,
கலர் கலரான கனவுகளே,
தாண்டும் ஆசையை நமக்குள்ளே
விதைத்தது அந்த நினைவுகளே!

கற்பனைக் குதிரையில் நாமேறி
கற்சுவர் தன்னை தாண்டிடலாம்;
தாண்டிட இயலாவிட்டாலோ,
குடைந்தொரு ஓட்டை போட்டிடலாம்!

ஆனால் மானிட மனச்சுவரோ
தானாய் திறந்தால் தானுண்டு!
வீணாய் எத்தணை தடைச்சுவர்கள்
போனால் முட்டும் தசைச்சுவர்கள்!

இறுகிப் போன இதயத்திலே
உதிரத் துளியும் காய்ந்திடுமோ?
கறுகிப் போன கனவுகளால்
கனியும் இப்போ கசந்திடுமோ?!

Now, to give justice to capture the originality, I sketch the portrait in English also!

Beyond the Brick walls.

End of a desert, some brick walls stand
...On the other side, our cherishing dreams,
Ill-worn heart, after long desert sand -
...Dreams should come true, so it gleams!

Walls are not there to stop our progress,
...Nor are they to frustrate us -
But to make us understand the need for success,
...just as we welcome the cheering nimbus!

Why should I write, why should I?
...It gives me happiness, fame and name;
Samething in crossing the brickwalls high-
...Just for the need of winning the game.

We never fully know how badly we need
...the love, the wisdom or some kind message!
Until it sprouts out breaking the seed
...Smashing the wall and crossing the passage!

Sometime the impenetrable walls are made of flesh,
...Pleading and begging truly has no impact;
No knife or hammer can knock out that mesh
...Beyond that bloods are drained in fact!

- சுமஜ்லா

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

Thursday, November 19, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 27

பாஜி தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தாள். தூக்கம் வராமல் போனதற்கு பலப்பல காரணங்கள். பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு விட்டு டவுனுக்கு குடியேறி விட்டனர். டவுனில் குடியேறியது நவீன கால தார்சு வீடாக இருந்தாலும், என்னமோ பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஞாபகங்களை சுமந்து நின்ற திண்ணையும், எண்ணக்குவியலோடு வண்ணக்கோலமிட்ட வாசலும், ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை கண்டு ரசித்த கூடமும், மன ஆழத்தின் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த கொட்டறையும், ஏக்கங்களையும் தாபங்களையும் கண்டு எள்ளி நகையாடிய உள்ளறையும், அவள் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தன.

தூக்கம் பிடிக்காமல் போக இன்னொரு முக்கிய காரணம் கமால். அழிச்சாட்டியமாக மனதில் வந்து அமர்ந்து, அவள் தனிமையோடு விளையாடிக் கொண்டிருந்தான். திருமணத்துக்கு இன்னமும் பதினைந்து நாட்கள் தான் இருந்தன. ஆனால், காதல் கொண்ட மனதுக்கு அது பதினைந்து யுகமாக தோன்றி, தூக்கத்தைத் தொலைக்க வைத்தது. அந்தகார இருளில், அவளுடைய முகத்தை யாராவது பார்த்திருந்தால், கேலி செய்திருப்பார்கள். ஏனென்றால், முகத்தில் நெளிந்த புன்முறுவல், அவளுடைய காதலை பறைசாற்றிக் கொண்டிருந்தது. தானாக தனக்குள் பூத்த முறுவல், அவளை அறியாமல் வெளிப்பட்டு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இது மட்டுமே காரணம் என்று சொன்னால், ஏற்றுக் கொள்ள முடியாது....முக்கிய காரணம் சின்னம்மாவின் வருகை....யாருக்கும் தெரியாது, எதிர்பார்க்கவும் இல்லை! சின்னம்மா என்று ஒருவர் இருப்பது பற்றி எள்ளளவும் தெரிந்திருக்கவில்லை...தன் தந்தை திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தான் மூவருமே நினைத்திருந்தனர். தன் தாயை தவிக்க விட்டதற்கு தண்டனையாக தந்தை, தற்சமயம் தனிமையில் வாடுவதாக எண்ணி தமக்குள் திருப்திபட்டுக் கொண்டிருந்தது போய், இப்போது புதிதாக ஒரு சின்னம்மா முளைத்தால்????

ஆமினா என்று பெயர் கொண்டிருந்த அந்த சின்னம்மாவைப் பற்றி கேள்விப்பட்டதும், தன் தந்தையிடம் கேட்க, ஆமென்ற தந்தை அவரை அழைத்து வந்தார் ஒரு நாள்.

சின்னம்மாவுக்கு ஒரே ஒரு பெண்பிள்ளை...பாஜியை விட நாலைந்து வயது குறைவாக இருக்கும். ராசிதா என்று பெயர்... நிறம் சற்று குறைவு என்றாலும், அசப்பில் பாஜியைப் போலவே இருந்தாள். அக்கா, அக்கா என்று அவள் உரிமை கொண்டாடியதும், இவர்களால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஆமினா வேற்று மதத்தை சார்ந்தவர். தஸ்தகீரோடு தொடர்பு ஏற்பட்டதும் மதம் மாறி விட்டாள். ஆமினாவின் தாய் வீட்டு சொத்தாய் இருந்த ஒரு சிறிய வீட்டில், குடியிருந்து வந்தனர். ஆனால், எங்கேயும் தஸ்தகீர் அவரை அழைத்து வந்ததில்லை. தஸ்தகீரின் உடன் பிறப்புகளுக்குக் கூட ஆமினாவைப் பற்றியோ, ராசிதாவைப் பற்றியோ அதிகம் தெரியவில்லை.

பாஜி மெல்ல புரண்டு படுத்தாள்....விடிந்து விட்டது....தூங்காமலே விடிவது இது முதல் முறையல்ல!

திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக ஆகிக் கொண்டிருந்தன. காதல் திருமணம் என்பதால், அவ்வப்போது, கமால் வந்து பாஜியிடம் பேசிச் செல்வான். ஆமினாவும் வந்து அப்பப்போ இவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கையில், சுஹைனாவுக்கு போன் வந்தது....

“ஹலோ யாருங்க?”

“நான் ரம்ஜின் பேசறேன்”

“எங்கே இருந்து பேசறீங்க?”

“நான் இப்ப யூ.கே வில் இருக்கேன்...எங்க நாட்டுல பிரச்சினையா இருந்ததனால, தொடர்பு கொள்ள முடியவில்லை...இப்ப தான் யூ.கே வந்தேன்...அதான் போன் செய்தேன்...பாஜியிடம் பேச முடியுமா???”

“பாஜிக்கு கல்யாணம் ஆகப் போவுதே?!”

எதிர் முனையில் எதிர்பாராத தாக்குதலால், மவுனம் நிலவியது...

“எப்போ திருமணம்?”

“பிப்ரவரி பதினாலு....காதலர் தினத்தன்று....”

“அப்படியா சரி, நான் போன் செய்ததாக சொல்ல வேண்டாம்.... போனை வெச்சிருங்க”

என்ன நினைத்தார் என்று தெரியவில்லை...பாஜி வீட்டில் போன் இல்லாததால், அவசரத்துக்கு ஆகும் என்று சுஹைனா நம்பரை கொடுத்து வைத்திருந்தாள் ரம்ஜினிடம்...அதனால் அவர் போன் செய்திருக்கிறார்.

சுஹைனா கடைசி வரை ரம்ஜின் போன் செய்த விஷயத்தை பாஜியிடம் சொல்லவில்லை. மர்ஜியாவிடம் மட்டும் சொன்னாள். ரம்ஜின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை....காதலர் தினத்தன்று தன் காதல் கருகிப் போகிறதென்றா??? இல்லை இன்னொரு காதல் அரங்கேறப் போகிறதென்றா? கமாலின் சிறு வயது காதலைப் பற்றி இவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே???

பாஜியின் திருமணம் சிம்பிளாக, நல்லவிதமாக நடந்து முடிந்தது. கமால், பாஜியின் மேல் மிகுந்த காதலோடு இருந்தான்... சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்கள்.

பாஜியின் திருமணம் முடிந்த கையோடு, உடல் நிலை பாதிக்கப்பட்ட சின்னம்மா, நாலு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பின், இறந்து போனார். ராசிதாவுக்கும் தஸ்தகீருக்கும் இது மிகுந்த மன அதிர்ச்சியை கொடுத்தது. காரியம் முடிந்தபின், ராசிதாவுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு, மர்ஜி தன் வீட்டுக்கு அழைத்து வந்து சிறிது நாட்கள் தங்க வைத்தாள்... புது உறவென்றாலும், சீக்கிரம் பழகி விட்டனர்... ‘அக்கா...நீங்களாவது ஒருவருக்கொருவர் துணையாக மூன்று பேர் இருக்கிறீர்கள்...எனக்கு யாரிருக்கா அக்கா...?’ என்று ராசிதா அழுதபோது, அனைவருமே மனம் உருகிவிட்டார்கள்... ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம் என்று அவளை தேற்றினார்கள்.

மர்ஜியின் கணவன் ஃபரீதுக்கு எந்த வியாபாரமும் ஒட்ட வில்லை...குணத்தில் குறைவில்லை என்றாலும், பணத்தில் குறையிருந்தது. எத்துணை நாளைக்குத்தான் கஷ்டப்பட முடியும்???ஒரு மேனேஜ்மெண்ட் ஸ்கூலில் ஃப்ரீ சர்விஸ் செய்து கொண்டிருந்த மர்ஜியா, கவர்ன்மெண்ட் போஸ்டிங்குக்கு முயன்று கொண்டிருந்தாள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது....

ஆப்பி, அனைவரிலும் நன்றாக இருந்தாள்....கணவன் அவளுக்கும் மேல் உஷாராக இருந்ததால், சிக்கனமாக இருந்து பணமும் நகையும் சேர்த்தாள். அவ்வப்போது அக்கா தங்கைக்கும் உதவி வந்தாள். ஆனாலும், நிரந்தரமாக உதவ முடியுமா? அவளும் இன்னொரு வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டவளாயிற்றே? மாமியார் எதாவது சொல்வாரென்று தெரிந்து பாதி தெரியாமல் பாதி செய்தாள்...அவளுடைய கவலை எல்லாம் ஆரிஃப் மீது தான். ஆரிஃப் இன்னமும் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து தான் சென்று கொண்டிருந்தான். வயது ஏழாகியும் பள்ளியிலும் சேர்க்க வில்லை. ஆனால், அவ்வப்போது ஆப்பி அவனுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களை உடனுக்குடன் படித்து எழுதப் படிக்க கற்றுக் கொண்டான். அவனுக்கேற்ற பள்ளியில், ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்க, மர்ஜியிடம் வசதி இல்லை...

பாஜிக்கு அடுத்த பத்தாம் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது...கணவன் வார்டு கவுன்சிலர் பதவி முடிந்ததும், வேறு பல சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். பெரிய வருமானம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ வந்து கொண்டிருந்தது...மர்ஜியைப் போலவே பாஜியும், அவளுடைய நகைகளையெல்லாம் கணவனுடைய வியாபாரத்துக்குக் கொடுத்து விட்டாள்.

இப்படி மூவரும் ஒரு வழியாக வாழ்க்கையில் செட்டிலாக, ராசிதா மட்டும் தந்தையுடன் இருந்தாள். தஸ்தகீரும் அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட, ஒரு நாள் டெஸ்ட் செய்த டாக்டர் கேன்சர் முற்றிய நிலையில் இருப்பதாகச் சொல்லி விட்டார்.
(வளரும்)

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

கவி தோன்றும் நேரம்


ஆழ்மனதில் கவி தோன்றும் நேரம்
ஆனந்தம் கூத்தாடும் காலம்
வானத்தில் மிதக்கின்ற மேகம்
போல் பஞ்சாய் லேசான தேகம்!

காதல் தீ கங்கான திப்போ,
நீர் ஊற்றி நீ அணைத்தால் தப்போ?!
மாதவளை மயக்குவதும் எப்போ,
மனம் வென்ற ஜெயத்தால் பூ ரிப்போ??!

கண்ணிரண்டும் கனவோடு பேசும்
கால் கொலுசை நீ தீண்ட கூசும்!
மனம் தொட்ட மச்சானின் நேசம்,
மலர்தோட்டம் போல் வாசம் வீசும்!!

உணர்வெல்லாம் மெழுகாக உருகும்,
உதவாமல் பழுதாகி மருகும்!
பெண்மனது உன் நினைவால் கருகும்,
பொன்வண்டு பூந்தேனைப் பருகும்!!!

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

Dawn - அதிகாலை

என் பள்ளி நாட்களில் நான் எழுதிய ஆங்கில கவிதையும், தற்போது அதற்கு செய்த மொழியாக்கமும் இங்கே தந்துள்ளேன்.

DAWN

In early, lovely, brisky dawn
...Birds are flying out of their nests.
As all these looked from a hillock down,
...Cocks are happily nodding their crests.

Densely packed greyish mist
...Is completely screening our sight
It is moving fainly without any rift
...Seeing the sun shining bright.

The mist envelops the town like shroud
...And seeking another place, it does gad.
There is always a sun behind the cloud
...So stop lamenting and be very glad.

-Sumazla.

அதிகாலை

புலர்ந்திடும் இனிய காலை பொழுதில்
...புல்லினம் பறக்கும் கூட்டை விட்டும்
பலகாட்சிகள் மேலிருந்து கீழே பார்த்தால்,
...மகிழ்வோடு சேவல் கொண்டையை ஆட்டும்!

அடர்பனி புகையும் சாம்பல் நிறத்தில்
...பார்வை தன்னை திரையிடும் நேரம்
சுடர்விடும் சூரியன் ஒளி தனை பார்த்து
...இடைவெளியின்றி ஊர்வலம் போகும்!

நீத்தார்க்கு போர்த்தும் வெள்ளாடை போல
...சூழும் பனிப்புகை வேறிடம் தேடும்
பூத்திருக்கும் சூரியன் மேகத்துக்கு பின்னால்,
...உளம் கவலைவிட்டு சந்தோஷம் நாடும்!

-சுமஜ்லா.

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

Monday, November 16, 2009

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

என் மகள் லாஃபிராவுக்கு ஆறு வயதில் காது குத்தியதற்காக வைத்த நலங்கு வைபோகத்துக்கு எழுதிய பாடல்.

அன்பு லாஃபிரா திருநாளோ
தந்தை தாய் கொஞ்சும் புது நாளோ
எங்க பூந்தோட்ட மலர் தானோ
தங்க தேனூற்றாய் இனிப்பாளோ

நலங்கெனும் சடங்கில் தன்னை மறப்பாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
பிஞ்சு விரல் கொலுசொலி கேட்கிறதே!
(அன்பு லாஃபிரா)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள்
வாழும் வாழ்வில் அர்த்தம் கூட்டினாள்
இரவும் பகலும் கவி பாடினாள்
இதயம் மகிழ மலர் சூடினாள்
நாய கத்தின் வழி நாடினாள்
நீ கேட்ட நலங்கின்று பொன்மானே!
நீ தூங்க மடி ஒன்று தருவேனே!!

சொந்தங்கள் உனைச் சுற்றி வாழ்த்தாதோ?!
பந்தங்கள் ராகங்கள் பாடாதோ!!
அல்லாஹ்வின் அருள் சேருமே!!
(அன்பு லாஃபிரா)

புதிய மலர்கள் அவள் கூந்தலில்,
குறும்பு தெரியும் அவள் பார்வையில்
தேனின் துளி அவள் பாதையில்

கனவு நிறைந்திருக்கும் கண்களில்
இதயம் மகிழ்வு கொள்ளும் ஆசையில்
பாசம் பொங்கும் அவள் வார்த்தையில்
மம்மியின் மனம் போல இருக்கின்றாள்
டாடிக்கு பல முத்தம் தருகின்றாள்

என்றென்றும் ஊர் போற்ற வாழ்வாளே
தீனுக்கு ஒளியாக இருப்பாளே
அல்லாஹ்வின் அருள்சேருமே!
(அன்பு லாஃபிரா)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா

தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

Saturday, November 7, 2009

நாகப்பட்டினமே

நாகப்பட்டினம் என்ற ஊர் பெயர் வரும்படி சினிமாப்பாடல் இருக்கா என்று நண்பரொருவர் கேட்க, அப்படி இல்லையென்று இதோ ஒன்றை நானே உருவாக்கினேன். அவரவருக்கு விருப்பமான மெட்டு போட்டுக் கொள்ளுங்கள்.

பல்லவி

சிப்பியுண்டு முத்துமுண்டு சிந்தையள்ளும் கடலுமுண்டு
நாகப்பட்டினமே - எங்க
நாகப்பட்டினமே!

உப்புமுண்டு மீனும் உண்டு மிதவை ஏற மார்க்கமுண்டு
மரத்தை கட்டணுமே - மச்சான்
மரத்தை கட்டணுமே!!

அட, கட்டுமரத்ததான் கட்டுபுட்டோம்
கடலுக்குள்ளே குதிச்சுபுட்டோம்
கரையும் தெரியல - பிழைக்கும்
வழியும் புரியல...
(சிப்பியுண்டு)

சரணம்

சேர்த்து வெச்ச கஞ்சி தண்ணி, நெத்திலி மீனு கருவாடு
சோத்த எல்லாம் தின்னுபுட்டு சோக்கா போன கடலுக்குள்ள,

போயி ரெண்டு வாரமாச்சு,
பாத்த விழி பூத்து போச்சு

கருகமணி பொன்னுனக்கு கைவளவி கொண்டு வாரேன்
என்று சொல்லி ஏங்க வெச்சு கடலுக்குள்ள போன மச்சான்

ஊழிக்காத்து அடிக்கையிலே
ஊனும் உயிரும் நடுங்குதைய்யா

நீ பத்திரமா திரும்பிவர
பாவி மனசு துடிக்குதைய்யா - இந்த
பாவி மனசு துடிக்குதைய்யா!
(சிப்பியுண்டு)

தலைவாழ இலைபோட்டு, அழகழகா விருந்து வைக்க
தலைகாணி சுகத்தை விட்டு தடம் பார்த்து விழிச்சிருக்கேன்.

காலடியின் சுவட்டிலெல்லாம்
உன் சுவடை தேடி நிக்கேன்

மலைபோல அலைவந்தா மனதெல்லாம் நனையுதைய்யா
காஞ்சு போன கருவாடா உள்மனசு சுருங்குதைய்யா

கைவளவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே,
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா.

(சிப்பியுண்டு)

-சுமஜ்லா.

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...

சாயபு வீட்டு சரித்திரம் - 26

”இனி யாரிருக்கா எங்களுக்கு? இனி யாரிருக்கா எங்களுக்கு?”

வாய் ஓயாமல் கதறிய ஆப்பியையும் பாஜியையும் சமாதானம் செய்ய முடியாமல், உறவுகள் விக்கித்து நின்றன. மர்ஜியும் உடைந்து தான் போனாள்.

ஊரும் தெரியாமல், உறவும் தெரியாமல், எங்கிருந்தோ வந்தவள் பாத்திமா...வளர்ப்பு மகளின் குழந்தைகளை நல்லபடி படிக்கவைத்து ஆளாக்கி விட்டு, அந்த திருப்தியோடு போய் சேர்ந்து விட்டாள்.

காரியங்கள் மளமளவென்று நடந்து முடிந்தன. காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் உருண்டோடியது.

தஸ்தகீர் அவ்வப்போது வந்து பார்த்து சென்றாலும், அவருக்கும் உடல் தளர்ந்து விட்டது. ரிடர்டாகி விட்டதால், அவர் கையில் முன்போல் காசு புழக்கம் இல்லை.

மர்ஜியின் கணவன் ஃபரீதுக்கோ, வாழ்க்கையில் எந்த தொழிலும் ஒட்டவில்லை. தங்கைகளுக்கு துணையாக மர்ஜி அம்மா வீட்டுக்கே குடியேறி விட்டாள்.

ஆப்பிக்கு எந்த வரனும் சரிவரவில்லை. அவள் எதிர்பார்ப்புபடி படித்த வரன் ஒன்றும் அமையவே இல்லை. திருமணம் முடிக்க கையில் பணமும் இல்லை; ஓரிருவரைத்தவிர, எடுத்து செய்யவும் ஆளில்லை.

இந்நிலையில் கேட்க ஆளில்லாததால், பாஜியின் நட்பு சிலோனில் இருக்கும் ரம்ஜினுடன் கடிதம் மூலமாக தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் திடீரென்று, ரம்ஜின் தன் நண்பர்களுடன் வந்து விட்டான். வந்து பார்த்து பேசி சென்றான். அதன் பின், அவர்களின் நட்பு இன்னும் வலுப்பtட்டது.

“ஆப்பி, உன்னை ஒருத்தர் பொண்ணு கேட்கறாங்க; டிப்ளமோ இன்ஜினியராம்; கட்டிடம் எல்லாம் காண்ட்ராக்ட் எடுத்து கட்டுகிறார்; நல்ல பையன்; சொந்தமும் கூட, நீ என்னடி சொல்ற?”

மர்ஜி கேட்க, ஒன்னுமே சொல்லவில்லை ஆப்பி!

“என்னடி இப்படி உம்முனு இருந்தா எப்படி?”
“என் தலையெழுத்து எப்படியோ, அப்படி ஆகட்டும்....”

பேசி முடித்து விட்டார்கள். தஸ்தகீர் தன் கையில் காசு இல்லை என்று கையை விரித்து விட, லைன் வீட்டை ஒத்திக்கு வைத்து திருமணத்தை எளிமையாக முடித்தார்கள்.

திருமணத்துக்கு பின்பும் ஆப்பி டீச்சர் வேலைக்குப் போய் கொண்டு தான் இருந்தாள்.

மர்ஜிக்கு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு அஜ்மல் என்று பெயரிட்tடார்கள். ஆபிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அதற்கு லுப்னா என்று பெயர் வைத்தார்கள்.

தலைமுறையொன்று உருண்டோடியது. லைன் வீட்டில் குடியிருந்த மும்மக்கா, வீட்டை ஒத்திக்கு வைத்ததால், காலி செய்து விட்டாள். இங்கு இவர்கள் வாழையடி வாழையாக பிள்ளை பெற்றுக் கொண்டிருக்க, சாதிக்கலிக்கு கடைசி வரை பிள்ளை செல்வம் உண்டாகவே இல்லை. இதுவும் விதியின் விளையாட்டு தானோ?!

சுஹைனாவுக்கு ஒரு பெண் குழந்தை... ஒரு நாள் சுஹைனா பாஜி வீட்டுக்கு வந்தாள்.

“ஏன் பாஜிக்கா, ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“சுஹைன், நான் சொல்றதை யார்கிட்டயும் சொல்லிடாத....கொஞ்ச நாளா ரம்ஜின்கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் இல்ல.... சிலோன்ல ஏதோ பிரச்சினையாட்டம் இருக்கு.... இவங்க, இங்கிலாந்துல குடியேறப்போறோம்னு சொல்லிட்டு இருந்தாங்க... என்ன ஆச்சோ தெரியல....”

“கடைசியா போன்ல பேசி எவ்ளோ நான் ஆச்சு அக்கா?”

“கடைசியா பேசி மூணு மாசம் இருக்கும்... அதுக்கப்புறம் போனும் எடுக்க மாட்டேங்கறாங்க.... லெட்டர் போட்டாலும் பதில் இல்ல.... என்னன்னே ஒன்னும் புரியல...”

இந்த விஷயம் ஒரு வழியாக மர்ஜியாவுக்கும் ஆபிதாவுக்கும் தெரியவர, ஒரு வழியாக பாஜியின் மனதை மாற்றி வேறு பக்கம் திருமணம் முடிக்க எண்ணினார்கள்.

பாஜி மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தாள். அதற்கு காரணம் இருந்தது. அவளுடைய பள்ளி நாட்களில் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்த கமால், இப்போது தன் தாய் மூலமாக பெண் கேட்டு அனுப்பியிருந்தான். அவன் அந்த சமயம், அந்த வட்டார கவுன்சிலராக இருந்தான். ஆளும் நன்றாக வளர்ந்து பாஜிலாவுக்கேற்ற ஜோடியாக இருந்தான்.

பாஜிலாவை கமாலுக்கு முடித்தவிடலாம் என்று மர்ஜியா எண்ணினாள். ஆனால், ஆபிதாவுக்கோ, இன்னும் சிறப்பான இடம் பார்க்கலாம் என்று எண்ணம்.

ஒரு நாள் கமாலின் தாயார் சாஹிதா நேரடியாகவே பாஜியிடம் பேசினார்,

“பாஜிலா...அவன் ஸ்கூல் படிக்கறப்ப இருந்தே உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கான்மா...கல்யாணம் கட்டுனா உன்னைத்தவிர வேற யாரையும் கட்ட மாட்டேங்கறான்.... உனக்கு எந்த குறையும் வராது... எம்பையன் ராஜா மாதிரி பார்த்துக்குவான்....”

பாஜிலா ஒன்றும் பேசவே இல்லை.

“கால்ல கைல விழுந்தாவது அந்த பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கிட்டு வர்ரேனு நான் சொல்லிட்டு வந்திருக்கேன்மா.... இந்தா அவன் போன் நம்பர்.... நீ வேணா அவன்கிட்ட பேசிப்பாரு... அப்புறமா மனசுக்கு திருப்தியா இருந்தா சம்மதம் சொல்லு.....”

எறும்பு ஊற கல்லும் தேயும்னு சொல்லுற மாதிரி, பேச பேச அவள் மனமும் கொஞ்சம் மாறுதல் அடைந்தது.

அக்காக்கள் இருவரும் திருமணம் முடிந்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தான் மட்டும் தனித்து நிற்பது போன்ற எண்ணம் அவளை வாட்டி வதைத்தது. சிலோனில் இருந்து எந்த தகவலும் வராததால், அதையும் நம்ப முடியவில்லை.

கமால் போன் செய்து பேச, அவள் சிலோன் விஷயம் உட்பட எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லி விட்டாள்.

“நான் ஒருத்தன் இங்க, ஏழெட்டு வருஷமா பக்கத்துத் தெருவிலயே காத்து கிடக்க, நீ எங்க சிலோனுக்கு பறக்க பார்த்த.... அதெல்லாம் மறந்திரு பாஜி... நான் உன்னை மனதார விரும்பறேன்.... இப்ப, உன் கையிலயும் அதிகமா பணமில்ல.... அதோட, அக்காக்களும் அதிகமா செலவு செய்யற மாதிரி இல்ல.... நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு.... நான் மீதி எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீ எந்த கவலையும் படாதடா”

கமால் சொல்ல சொல்ல, அவள் மனம் மாறி விட்டது. வேக வேகமாக திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். நீண்ட கால காதல் என்பதால், காதலர் தினத்தன்று திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கமால் முடிவு செய்தான். டிபன் மட்டும் போட்டு சிம்பிளாக முடிக்க திட்டமிட்டிருந்தனர். தஸ்தகீர் ஏதோ தன்னால் ஆனதை தருவதாக சொன்னார்.

நாளாக நாளாக, கமாலும் பாஜிலாவும் உள்ளத்தளவில் மிகவும் நெருங்கி விட்டனர். குடியிருக்கும் வீட்டை ஒத்திக்கு வைத்து விட்டு, டவுன் பக்கம் குடியேற முடிவு செய்தனர்.

அப்போது தான் பக்கத்து வீட்டு சபுரா வந்தாள்,

“மர்ஜி, உனக்குத் தெரியுமா....... உங்கப்பாவுக்கு இன்னொரு பொண்டாட்டி இருக்கு..... உங்க சின்னமமாவுக்கு ஒரு மகளும் இருக்கா..... டவுன்ல குடியிருக்காங்க.... “

(வளரும்)

-சுமஜ்லா.

இந்த இடுகையின் தொடர்ச்சியை படிக்க...
Google