Sunday, February 3, 2013

படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை

மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத்திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம்.

இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம்.

இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளும் அவன் வீட்டில் படிப்பதே இல்லை, நானும் படி என்று சொல்வதில்லை. வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஹிந்தி டியூசனுக்கு போய் விடுவான். வந்ததும் கொஞ்சம் நேரம் ஹோம் வொர்க் செய்வான். அவ்வளவு தான். பரிட்சை அப்போ கூட படிக்க மாட்டான்.

ஹோம் வொர்க் எல்லாம் அறிவுக்கு வேலை தருவதாக இருக்கும். அதாவது ஒர்க் ஷீட் தான். பதிலை அவர்களாகத் தான் தேடி பாடத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். Rote memorization எல்லாம் கிடையாது. பல நேரங்களில் அவன் நெட்டில் தேடி கண்டுபிடித்துக் கொள்வான். சில நேரங்களில் மட்டும் நான் உதவி செய்வேன். விடையை எப்போதும் சொல்லித் தர மாட்டேன். ஆனால், எப்படி கண்டுபிடிப்பது என்று சில நேரம் க்ளூ மட்டும் கொடுத்து அவனையே கண்டுபிடிக்க வைப்பேன். நான் படித்த பி.எட் இதற்காகவாவது உதவுகிறது.

இப்போது மதிப்பெண் லட்டு மாதிரி வாங்குகிறான். கணக்கில், சயின்ஸில், கம்ப்யூட்டர் சயின்ஸில் மற்றும் சோஷியலில் எப்போதும் வகுப்பில் முதல் தான். பெரும்பாலும் செண்டம் வாங்கி விடுகிறான். ஆனால், தமிழும் ஆங்கிலமும் மட்டும் கொஞ்சம் உதைக்கும். ஸ்பெல்லிங் தகராறினால் மதிப்பெண் குறைந்து விடுகிறது. ஆனாலும், நான் அதையும் படி படி என்று சொல்வதில்லை, மாறாக தமிழ் நியூஸ் ஆன்லைனில் வாசிக்க சொல்வேன், ஆங்கில நியூஸ் பேப்பர் ஸ்டூடண்ட் எடிஷன் ஸ்கூலில் தினமும் கொடுக்கிறார்கள், அதை வாசிக்கச் சொல்வேன். ஒரு நல்ல கல்வி LSRW Skills வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதாவது, listening, speaking, reading and writing. நான் பெரும்பாலும் என் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுவதால் (அவர்கள் பழக வேண்டும் என்று) அவர்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்ற வகுப்பு தோழர்களுடையதை விட மேலாகவே இருக்கிறது.

வீட்டில் படிக்காமலே எப்படி மார்க் வாங்குகிறான் என்பது தான் எனக்கு ஆச்சரியம். டீச்சரிடம் ’வீட்டில் இவன் படிப்பதே இல்லை, எப்படி மார்க் வாங்குகிறான், வகுப்பில் மற்ற அனைவரும் சராசரியா?’ என்று கேட்டேன். இக்கேள்வி அவரை கோபப்படுத்தி இருக்க வேண்டும். அவர் என்னிடம் கேட்கிறார், ‘எதற்கு வீட்டில் படிக்க வேண்டும்? ஹோம் வொர்க் மட்டும் செய்தால் போதும், அதான் இங்கேயே எல்லாம் புரியவைத்து விடுகிறோமே என்று’. எனக்கு ஆச்சரியம் ஒரு புறம். இத்தகைய எஜுகேஷன் சிஸ்டம் என் மகனுக்கு வாய்த்திருக்கிறதே என்ற சந்தோஷம் ஒரு புறம். அவன் ஒரு போதும் மனப்பாடம் செய்வதில்லை, புரிந்து படிக்கிறான் என்று புரிந்தது.

மேலும் அவன் ஆசிரியை சொன்னது என்னவென்றால், ‘உங்கள் பிள்ளைக்கு கணக்கு மிக நன்றாக வருகிறது, நேரடியான கணக்கை எல்லாரும் போட்டுவிடுவார்கள், ஆனால் சுற்றி வளைத்துக் கேட்டால், இவன் ஒருவன் மட்டும் தான் வகுப்பில் போடுகிறான். நிறைய puzzlesம் மேல் வகுப்பு கணக்குகளையும் நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொடுங்கள்... மிகவும் திறமையாக வருவான்’ என்றார். கணக்கென்றால் நான் காததூரம் ஓடுவேன், நான் எங்கே இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யப் போகிறேன் என்று விட்டுவிட்டேன். +2 படிக்கும் மகள் சில நேரம் அவள் பாடத்தில் வரும் கணக்குகளை அவனுக்கு சொல்லிக் கொடுப்பாள், அதையும் கூட புரிந்து கொள்கிறான்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பிள்ளை படிப்பதற்கும் படிக்காததற்கும், Education System ல் இருக்கும் குறைபாடும் ஒரு காரணம். பிள்ளைகளின் திறமைகளை சரியாக எடை போடத் தெரிந்த ஆசிரியர்கள் வாய்த்தால் எல்லாப் பிள்ளைகளும் அறிவாளிகளே! தமிழ் நாடு எஜுகேஷன் சிஸ்டத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழிலோ ஆங்கிலத்திலோ இங்கே பதியுங்கள்:Education in Tamil Nadu கமெண்ட்ஸில் சொல்லப்படும் கருத்துக்கள் சில நாட்களில் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து விடும். ஆனால், நம் கருத்துக்களை பலரும் அறியச் செய்வதற்கென்றே புது முறையில் ஒருவாக்கப்பட்டிருக்கும் புதுமையான தளம் இது!

Thursday, January 31, 2013

நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்?

உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன...

(என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான்.

நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: http://www.facebook.com/sumazla/posts/585331091482190)

உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.

பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.

மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்! மேலும் விஸ்வரூபம் பற்றிய என் கருத்துக்கள் இங்கே: Vishwaroopam 


என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள். நன்றி!

- சுமஜ்லா

Sunday, November 18, 2012

புகைப்பட போட்டி முதல் சுற்று முடிவுகள் & அடுத்த போட்டி அறிவிப்பு

கீழ்கண்ட 23 புகைப்படங்களும் வீதி விஷுவல் காண்டெஸ்ட் இறுதிச் சுற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 7 புகைப்படங்கள் பரிசு பெறும். பரிசு பெறத் தகுதியான டாப் 7 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஃபோரமில் தலைப்புவாரியாக வரிசைப்படுத்துங்கள். உங்கள் தேர்வும் வீதி டீம் தேர்வும் ஒன்றாக இருந்தால், ஒருவருக்கு ரூ.2000 பரிசு உண்டு. யார் வேண்டுமானாலும் எந்நாட்டவரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு பார்க்க http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491

ஒவ்வொரு படத்தின் மேலும் க்ளிக் செய்தால், பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.

On the way to Harihar
Alleppey Nature Scene
Chennai Fort Railway Station Road
Pichavaram near Chidambaram
River Vehicle
Varalaatru Aarvalar Kuzhu
Spider net on tree at Kodai Hills
Painted Pumpkins for Sale
Boat Jetty at Pazhaverkadu brackish water Lake, Tiruvallur
Man & Monkey drinking water, Sholingur Temple
Children Jumping onto the River
As seen in the Besant Nagar Beach
Wall Painting at K. K. Nagar Chennai
Statue of a Farmer
Tharavadu Heritage Home, Kumarakom
House above the Tree in Coorg
Big Sea - Big Message
Shadow of two people standing near Palavakkam Beach
Monkey Traveling through wire
People standing between big Stones
Meenakshi Amman Temple
Beautiful Paintings at Harrington Subway
Old woman in rain



போட்டி பற்றிய பழைய பதிவு: http://sumazla.blogspot.com/2012/08/10000.html

- சுமஜ்லா

Saturday, August 18, 2012

வெப் ஹோஸ்ட்டில் வோர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி?


தற்சமயம் உங்களிடம் இருக்கும் வெப்சைட்டில் ப்ளாகை இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது வோர்டுபிரஸில் உங்கள் சைட் இயங்க வேண்டும் என்றாலோ நீங்கள் வோர்டுபிரஸை உங்கள் வெப் ஹோஸ்ட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதற்கு என்ன தேவை:

1. வெப் சர்வர் (Web Server)
2. File Zilla போன்ற FTP Client
3. டெக்ஸ்ட் எடிட்டர்

செய்முறை

Wednesday, August 15, 2012

டேப்லட் பிஸி வாங்கும் முன்பு…


”மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்”

“தர மாட்டேன் போடா…”

”டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி”


என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன்.


Monday, August 13, 2012

போட்டி போடலாம் வாருங்கள்! பரிசு ரூ. 10,000


வீதி விஷுவல் கான்டெஸ்ட்


மொத்த பரிசு – ரூ. 10,000


Veethi Visual Contest
உங்கள் ஊரின் மண்வாசனை கலந்த புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு தர வேண்டும். உங்கள் வேலை அவ்வளவு தான்.


Friday, August 10, 2012

காதலென்னும் தனிசுகம்



ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர
நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர
பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட
தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே!


கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க
பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட
கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய்
அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே!


சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க
பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க
ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர
காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே!


பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க
சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர
ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே
பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!!

- சுமஜ்லா

Wednesday, July 25, 2012

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி......

சின்ன வயசுல மணலில வீடு கட்டி விளையாடாதவங்க யாரு இருக்க முடியும். இப்பவும் நான் மணலைப் பார்த்தா விளையாட ஆரம்பித்து விடுவேன். இப்படித்தான் கொச்சி போயிருந்தப்ப ஃபோர்ட் கொச்சியில் ஈர மணலைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டேன். என் மகள் மற்றும் மகனுடன் போட்டி போட்டுக் கொண்டு யார் அழகாக மணலில் சிற்பம் செய்றாங்கன்னு பார்க்கலாம் என்றேன். என்னவர் சரி நான் தீர்ப்பு சொல்கிறேன் என்றார்.

மூவரும் அவரவர் வயதுக்கு தக்கபடி உருவாக்கினோம். பள்ளி நாட்களின் ஞாபகம் என் கண் முன்னால் தோன்றியதால் பள்ளிச் சீருடையை நான் மணலில் உருவாக்கினேன். குழந்தைகளோடு குழந்தையாகிப் போனேன். இதோ அந்த மணல் சிற்பம்.



என் மகள் மிக்கி மவுஸும் என் மகன் மலையும் உருவாக்கினார்கள். மகனுக்கே ஜெயம் ஏனென்றால், நாங்கள் ஒரு முறை சிற்பம் செய்வதற்குள் அவன் அழித்து அழித்து ஐந்தாறு முறை கட்டிவிட்டான். ஆக அவனுடைய முயற்சிக்கு அங்கீகாரம் தர வேண்டுமல்லவா? மேலும் விவரங்களும் புகைப்படங்களும் இங்கே: Art of Growing Hills

இன்னொரு சுவையான பதிவு: Snake In My House

சுமஜ்லா

Monday, July 23, 2012

வீட்டில் பாம்பு

நேற்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ஐந்து அடி நீள நாகப்பாம்பு எங்க வீட்டு கிட்சனுக்குள். எதேச்சையாக தண்ணீர் குடிக்கப் போன என்னவர் அதைப் பார்த்து விட்டு அலற, கம்பு, தடி சகிதம் பயந்து நடுங்கியபடி மெதுவாக அடி மேல் அடி வைத்து அதை நெருங்கினோம்.


வெங்காயக் கூடையின் நடுவே ஒளிந்திருந்தது. நாகத்தை துரத்திவிட நாங்கள் செய்த முயற்சி எல்லாம் தோற்றுவிட கடைசியாக ஒன்னரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அதை அடித்துவிட்டோம். படம் எடுத்து ஆடும் பாம்பை முதன் முறையாக மிக அருகில் பார்த்தும் அதன் சீறும் சப்தத்தைக் கேட்டும் வெலவெலத்துப் போனேன்.


சொட்டும் வேர்வையோடு அதை வேட்டையாடிய பெருமித உணர்வுடன் மச்சான் செத்த பாம்பை தடியில் ஏந்திக் கொண்டிருக்கிறார். மேலும் விவரங்கள் மற்றும் படங்கள்: Snake In My House

இன்னொரு சுவையான பதிவு: எனது மணல் சிற்ப புகைப்படங்கள்

- சுமஜ்லா

Saturday, June 16, 2012

உங்கள் எழுத்துக்குப் பணம் வேண்டுமா?

கடைசியாக பதிவிட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பலப்பல மின்னஞ்சல்கள் பதிவிடக்கோரி. குறிப்பாக நிஜாம் அண்ணனுக்கு என் நன்றிகள். என் இனிய வாசகர்களை நான் இழந்துவிட்டது வருத்தம் தான். பலரும் நான் ஆசிரியைப் பணியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இருப்பது எழுத்துத் துறையில் தான். அதுவும் இணையத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் அல்ல ஆங்கிலத்தில்.


இசையில் ரசனையுள்ளவர்கள் இசையமைப்பாளர்களாகும் போது கரும்பு தின்ன கூலி கிடைப்பது போல மனமகிழ்வுடன் பணமும் கிடைக்குமே அதுபோல இப்போது என் பணி, என் மூச்சு, என் பொழுதுபோக்கு, ஏன் என் வாழ்க்கையே எழுதுவது என்று ஆகிவிட்டது. அதுவும், சாமானிய இந்தியர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு வருமானத்துடன்…. ஆர்வமுள்ள யாவரும் பணம் சம்பாதிக்கலாம் இத்துறையில். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற துறை இது. திறமை மட்டும் இருந்தால் போதும், திறம்பட செயல்புரியலாம்.