Thursday, August 6, 2009

விட்டாச்சு லீவு

இஸ்லாமியருக்கு ஒரு சிறு பண்டிகை (சங்கைக்குரிய பராத் இரவு). அதோடு, என் தாயாருக்கு காய்ச்சல். அதனால், நான் என் அம்மா வீட்டுக்கு போகிறேன். ஒரு மூன்று நாட்களுக்கு என் பதிவுக்கு லீவு! அதுவரை என் பழைய பக்கங்களை புரட்டுங்கள்.

அதோடு, இன்னொரு சிறு முயற்சியிலும் இறங்கி இருக்கிறேன். அதாவது என் எழுத்துக்களை புத்தகவடிவில் கொண்டுவருவதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்து ஒரு சிலரை தொடர்பு கொண்டு வருகிறேன்.

எங்கள் ஊரில் புத்தக கண்காட்சி நடப்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அது பற்றியும், வட இந்திய சுற்றுலாவின் மீதியையும், திங்கள் முதல் எழுதுகிறேன்.

-சுமஜ்லா.

16 comments:

நட்புடன் ஜமால் said...

தாயாருக்கு பிரார்த்தனைகள்.

தங்களுக்கு வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

நல்ல படியா போய் வாங்க அம்மாவிற்கு ஸலாம்சொல்லுங்கள் (ராபியாமா தானே)ஞாப‌க‌ம் இருக்கு.

நானும் இன்று நோன்பு

உங்க‌ள் எழுத்துக்க‌ள் புத்த‌க‌ வ‌டிவில்வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்

Unknown said...

பராஅத் இரவு பற்றி நீங்களும் ஜஸீலாவும் இன்னும் நிறைய அறிய முயற்சியுங்கள்.
கஷ்டப்பட்டு பாரம் சுமப்பானேன்?
அம்மா நலம் பெற துஆக்களுடன்.

NIZAMUDEEN said...

அம்மா நலமடைந்து விட்டார்களா?
நலம் பெற எனது துஆ!
அம்மாவை நன்கு கவனித்து, காய்ச்சல் குணமானபின்
தொடர வாருங்கள்...

NIZAMUDEEN said...

முன்பே ஒருமுறை நான் கேட்டிருந்தேன்,
'தொடரை புத்தகமாகப் போடலாம்...' என்று,
ஞாபகமிருக்கிறதா? அந்த வேளை வந்துள்ளது.
கவனமாய் செயல்படுங்கள். வாழ்த்துக்கள்!

கீழை ராஸா said...

என்ன தான் எழுத்துக்களை கணிணியில் பார்த்தாலும் அச்சில் பார்ப்பதின் சுகமே தனி...வாழ்த்துக்கள்...

க. தங்கமணி பிரபு said...

ரொம்ப மகிழ்ச்சி! பயண வாழ்த்துக்கள்! ஊருலர்ந்து வந்து பிவரும் என் சந்தேகத்துக்கு முடிஞ்சா பதில் கொடுங்க
1. இருக்கற ப்ளாக்க, அப்படியே edit htmlல போய் சில வரிகளை மாற்றி அகல்ப்படுத்த முடியாதா?
1a. வேற அகலமான டெம்ப்ளேட் போட்டா, இப்ப இதுக்குள்ள இணைத்திருக்கற favicon, ஓட்டுப்பட்டையெல்லம் எப்படி திருமப் இணைக்கிறது?

மீண்டும் வாழ்த்துக்கள்!!

இப்னு அப்துல் ரஜாக் said...

தாயாருக்கு பிரார்த்தனைகள்.

தங்களுக்கு வாழ்த்துகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

அம்மா வீட்டிலிருந்து தான் பதில் தருகிறேன். அம்மா வீட்டிலும் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் போட்டோஸ் பேக் அப் இல்லாததால், பதிவு போடுவது சிரமம்.

என் தாயின் உடல் நிலை பரவாயில்லை. அன்போடு விசாரித்தவர்களுக்கு நன்றி!

ஜலீலாக்கா, நானும் தான் நோன்பு வைத்திருந்தேன்.

அதோடு, பயணம் போகும் தூரத்தில் எல்லாம் இல்லை அம்மா வீடு, 4 கிலோ மீட்டர் தான். வாரம் 4 முறையாவது பார்ப்பேன். எந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும், அவர்கள் இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஏரியாவுக்கு தான் போக வேண்டும். தற்சமயம், ஒரு ஷார்ட் ஸ்டே அவ்வளவு தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

//என்ன தான் எழுத்துக்களை கணிணியில் பார்த்தாலும் அச்சில் பார்ப்பதின் சுகமே //

சக்ஸல் ஆனால், விரிவாக சொல்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

1. இருக்கற ப்ளாக்க, அப்படியே edit htmlல போய் சில வரிகளை மாற்றி அகல்ப்படுத்த முடியாதா?

முடியாது! எனக்கு தெரிந்தவரை! சட்டையை அப்படியே பெரிதாக்க முடியாது. ஒட்டு போடுவதை விட புது சட்டை வாங்குவது மேல் அல்லவா?

//1a. வேற அகலமான டெம்ப்ளேட் போட்டா, இப்ப இதுக்குள்ள இணைத்திருக்கற favicon, ஓட்டுப்பட்டையெல்லம் எப்படி திருமப் இணைக்கிறது?//

முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு சுலபமாக, முதலில் இணைத்தது போலவே இணைத்து கொள்ளலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

//கஷ்டப்பட்டு பாரம் சுமப்பானேன்?//

لكم ذينكم وليدين

(லகும் தீனுக்கும் வலியதீன்)

உங்களுடைய (வினைக்குரிய) கூலி உங்களுக்கும், என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் கிடைக்கும் (18:6)

S.A. நவாஸுதீன் said...

அம்மாவின் உடல் விரைவில் நலம்பெற எங்களின் பிரார்த்தனை உண்டு

S.A. நவாஸுதீன் said...

புத்தக வடிவில் கொண்டுவரும் உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

SUFFIX said...

தாயார் நலமா இருக்காங்களா சகோதரி? தங்களின் ஆக்கங்கள் புத்தக வடிவில் உருவாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

SUMAZLA/சுமஜ்லா said...

தாயாருக்கு உடல்நிலை பரவாயில்லை. அரபு சீமையிலே பகுதியில் பாராட்டிய அமைதிரயிலுக்கும் நன்றிகள்.