Sunday, February 28, 2010

குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்...
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

லாஃபிராமா கண்மணியை ......
லாஃபிராமா கண்மணியை
தாலாட்டும் தென்றலது
லாஃபிராமா கண்மணியை
தாலாட்டும் தென்றலது
அன்புடனே பாடிவரும்
இன்பத்துடன் மேவிவரும்!
அன்புடனே பாடிவரும்
இன்பத்துடன் மேவிவரும்!

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

எங்களன்பு குலக்கொடியே
இறையோனின் அருட்கொடையே
எங்களன்பு குலக்கொடியே
இறையோனின் அருட்கொடையே
பாசத்திலே ஏது எல்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை!
பாசத்திலே ஏது எல்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை!

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

பெற்றவர்கள் மகிழ்ந்திடவே
பிறந்து வந்த பொன்மயிலே
பெற்றவர்கள் மகிழ்ந்திடவே
பிறந்து வந்த பொன்மயிலே
காலம் என்னும் வெள்ளத்திலே
பாடி வரும் பூங்குயிலே
காலம் என்னும் வெள்ளத்திலே
பாடி வரும் பூங்குயிலே

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

முத்தத்தினை பொழிந்துவிட
புன்சிரிப்பில் மயங்கிவிடும்
முத்தத்தினை பொழிந்துவிட
புன்சிரிப்பில் மயங்கிவிடும்
அன்புமொழி பேசிவிட்டால்
சிந்தை நிலை மாறிவிடும்.
அன்புமொழி பேசிவிட்டால்
சிந்தை நிலை மாறிவிடும்.

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்...
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

6 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வழக்கம் போல் கலக்கல் வரிகள் ...அக்கா ..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆழமான கருத்துக்களுடன்,

அழகான இராகத்தில்,

அருமையான பாடல்.

நட்புடன் ஜமால் said...

பாசத்திலே ஏது எல்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை!]]


அழகு.

பிரேமா மகள் said...

இந்த பாட்டை முதலிலேயே எழுதி இருந்தால்,, நான் பிறக்கும் போது எங்கப்பா அம்மா பாடி இருப்பாங்களே? பரவாயில்லை.. இனி பாட சொல்றேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

இந்த பாடல் நான் எழுதி 13 வருஷம் ஆயிருச்சு!

Asiya Omar said...

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணேன்னு இனி வாயில் வரப்போகுது,அமைதியான நதியினிலே ஓடம்,அருமையான பாடல்,அதை நீங்கள் இட்டுக்கட்டி பாடிய விதம் மிக அருமை.