Thursday, May 21, 2009

இளமையின் இனிமைகள்


புவிதரும் இனிமைகள் தனைத் துறந்தேன் - ஒரு
கவிதையின் வரியினில் எனை மறந்தேன்.
செவிசுவை சொற்சுவை பொருட்சுவையும் - நிறை
கவிசுவை கடல்தனில் கலந்திருந்தேன்.

பலபல நினைவுகள் மனதினிலே - அதை
'மள மள' வென்றே எழுதி விட்டேன்.
இளமையும் முடிந்திடும் முன்பாக - அதன்
இயல்புகள் இனிமைகள் பதிவு செய்தேன்.

கோடி கோடி சொற்களிலே - நான்
தேடி எடுத்த சில சொற்கள்.
நாடி நரம்புகள் சிலிர்த்திடவே - இன்று
பாடி மகிழ்ந்தேன் பூங்கவிதை.

தேடலின் தவிப்புகள் எழுத்தாச்சு - எம்
ஊடலும் கூடலும் கவியாச்சு!
வாடலும் அதன் பின் காதலுமே - ஒரு
பாடலாய் இன்று உருவாச்சு!!!

சுமஜ்லா

No comments: